ஞாயிறு, 15 ஜூலை, 2012




   “தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
    தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
    தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
    தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
    தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
    தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
    தமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்
    தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
    தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்.
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத் 
    தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ ”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக